ஸ்டாலின் – மகாநாம தேரர் தொடர்ந்து விளக்கமறியலில்…. விடுதலை கோரி மக்கள் வீதியில்

கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் பேரில் ஹிஸ் ஹைனஸ் கொஸ்வத்தவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தி நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் 28ஆம் திகதி , நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய குற்றச்சாட்டின் பேரில்  கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படி ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்று வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.