அக்கரைப்பற்று இளைஞர் முல்லைத்தீவில் நீச்சல் தடாகத்தில் இருந்து சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு நகரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றின் விடுதியின் நீச்சல் தடாகத்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த ஹோட்டலில் பணியாற்றிவரும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞரே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரைக் காணவில்லை என்று முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று காலை ஹோட்டலின் நீச்சல் தடாகத்தில் சடலம் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஹோட்டலின் உரிமையாளர் முல்லைத்தீவுப் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த முல்லைத்தீவுப் பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.