பிரதமர் – ‘மொட்டு’ எம்.பிக்கள் பேச்சு! – சர்வகட்சி அரசுக்கு முழு ஆதரவு எனத் தெரிவிப்பு

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றிரவு ‘மொட்டு’க் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

சர்வகட்சி அரசு சம்பந்தமாக இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் முன்னெடுக்கும் நகர்வுகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று ‘மொட்டு’க் கட்சி தரப்பில் பிரதமரிடம் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

சர்வகட்சி கோட்பாட்டுக்காகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலகினர். எனவே, இந்த இலக்கை அடைய தமது கட்சி முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று மொட்டுக் கட்சி எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்.

எம்.பிக்கள், பிரதமரைச் தேடிச்சென்றே பேச்சு நடத்துவர். எனினும், ‘மொட்டு’க் கட்சி தலைமையகத்துக்கே வந்து அக்கட்சியினருடன் பிரதமர் கலந்துரையாடியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.