நாளை வரும்! இல்லை, வராது! சீன உளவு கப்பல் பற்றி இரு கருத்துகள்!

யுவான் வாங் 5 கப்பலின் இலங்கைக்கான பயணத்தை இடைநிறுத்துமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்த போதிலும் குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று காலை 10 மணியளவில் இந்தோனேசியாவிற்கு அருகிலுள்ள கடலில் மணிக்கு 26 கிலோமீற்றர் வேகத்தில் கப்பல் பயணித்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

குறித்த கப்பல் இந்திய நேரப்படி வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய தனது பாதையை மாற்றியுள்ளதாக மற்றுமொரு ஊடக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

கப்பல்கள் தொடர்பான இணையத்தளமான Maritimeoptima.com இன் படி, சீனக் கப்பல் தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து சுமார் 600 கடல் மைல் தொலைவில் உள்ளதாகவும், அதன் வேகம் குறைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.