விரைவில் இலங்கை திரும்புவார் கோட்டா – ‘மொட்டு’ எம்.பி. கூறுகின்றார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் நாடு திரும்புவார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த தெரிவித்தார்.

‘இலங்கையில் இருந்து மாலைதீவு சென்ற கோட்டாபய ராஜபக்ச, அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். தற்போது தாய்லாந்து சென்றுள்ளார். எதற்காக இவ்வாறு சுற்றித் திரிகின்றார். அவருக்கு இலங்கை வருவதற்கு உகந்த சூழ்நிலை இல்லையா?’ என்று ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“அவ்வாறு எந்தத் தடையும் இல்லை. அவர் விரும்பிய நேரத்தில் நாடு திரும்பலாம். அவருக்கென சில பணிகள் இருக்கலாம். அந்தப் பணிகள் முடிவடைந்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிச்சயம் நாடு திரும்புவார். இலங்கைதான் அவரின் நாடு” – என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த மேலும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.