நிதிக்குழுவின் தலைவராகிறார் ஹர்ஷ டி சில்வா.

அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று கூடிய தெரிவுக்குழு, மேற்படி பதவிக்கு பல பெயர்களை முன்வைத்ததுடன், அதில் ஹர்ஷ டி சில்வாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை பாராளுமன்ற நிதிக்குழுவின் தலைவர் பதவி ஆளுங்கட்சிக்கு கிடைத்ததால், கோப் உள்ளிட்ட நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன்படி ஏனைய குழுக்களின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் ஹர்ஷ டி சில்வாவுக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.