சிறை அதிகாரியைச் சுட்டுக்கொலை செய்தவர் கைது!

சிறைச்சாலை அதிகாரி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

51 வயதான குறித்த சந்தேகநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதன் பின்னர் தப்பிச் சென்று டுபாயில் சில நாட்கள் தங்கி இருந்துள்ளார். இந்தநிலையில் அவர் மீள நாடு திரும்பியதையடுத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பலப்பிட்டிய நீதிவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டமையை அடுத்து அவரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சிறைச்சாலை அதிகாரி அம்பலாங்கொடைப் பகுதியில் கடந்த 3ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.