பருத்தித்துறையில் தையலகத்துக்குள் புகுந்து வாள்வெட்டு!

யாழ்., பருத்தித்துறை நகரில் உள்ள தையலகத்தினுள் புகுந்த முகமூடி அணிந்த நபர்கள் தையலகத்தை அடித்து உடைத்ததுடன் அதன் உரிமையாளரை வாளால் வெட்டிக் காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

நேற்றிரவு 7:30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

மின்சாரம் தடைப்பட்டதைச் சாதகமாகப் பயன்படுத்தி மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த நபர்கள் இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

படுகாயமடைந்த 44 வயதான உரிமையாளர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.