மேர்வின் சில்வா விடுவிப்பு!

குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை விடுவித்த கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம், அவரை எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்டது.

2007ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன வளாகத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அவர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, குறித்த சம்பவம் தொடர்பில் பிணை தேவையற்றது எனவும், எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நீதிமன்றில் முனிலையானால் போதுமானது எனவும் மேர்வின் சில்வாவுக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

Leave A Reply

Your email address will not be published.