வசந்த முதலிகே உள்ளிட்ட 6 பேர் பொலிஸாரால் கைது! (வீடியோ)

கொழும்பு கஸ்பஹா சந்தி பகுதியில் வைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றிய வசந்த முதலிகே உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டது.

கொழும்பில் இன்று (ஆகஸ்ட் 18) இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியின் போது ஏனைய குழுவினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

செயற்பாட்டாளர்களை கைது செய்தல், பொருட்களின் விலை குறைப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் இன்று பிற்பகல் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இருந்து பேரணியை ஆரம்பித்தது.

பின்னர், நடைபயணமாக கொம்பனித் தெரு பகுதிக்கு வந்தபோது, ​​போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கும்பலை கலைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.