கோட்டாவின் வீட்டை சுற்றி பாதுகாப்பு வளையம் மற்றும் பலத்த பாதுகாப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான பெங்கிரிவத்த பிரதேசத்தில் உள்ள இல்லம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு பொலிஸ் மா அதிபர், அப்பகுதியிலுள்ள பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் வீட்டைச் சூழவுள்ள பகுதிகள் விசேட கண்காணிப்பில் வைக்கப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடத்திய கலந்துரையாடலின் போது பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.