கொழும்புக்கும் – காங்கேசன்துறைக்கும் இடையிலான இரவுத்தபால் ரயில் சேவை ஆரமபம்.

கொழும்புக்கும் – காங்கேசன்துறைக்கும் இடையிலான இரவுத்தபால் ரயில் சேவை நீண்ட நாட்களுக்கு பின்னர் நேற்று இரவு (19.08.2022) கொழும்பில் இருந்து ஆரம்பித்த நிலையில் இன்று (20.08.2022) காங்கேசன்துறையில் இருந்து முதலாவது சேவை ஆரம்பமானது.

காங்கேசன்துறையில் இருந்து இரவு 18.00 மணிக்கு புறப்பட்ட ரயில் யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்தை 18.45 மணிக்கு வந்தடைந்ததுடன் 19.00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை அதிகாலை 4.00 மணிக்கு சென்றடையும்.

Leave A Reply

Your email address will not be published.