அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேசிய மக்கள் சக்தி போராட்டம். (வீடியோ)

பொருட்களின் விலை ஏற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களைக் கண்டித்து தேசிய மக்கள் சக்தி கொழும்பு நுகேகொடை பிரதேசத்தில் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்தது.

நுகேகொடையில் ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி பாராளுமன்றத்தை கலை!தேர்தலை நடத்து! எனும் முன்னெடுப்போடு விஜேராம சந்திவரை சென்றது.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

அத்துடன் ‘பொருட்களின் விலை வானத்தை நோக்கி; மக்கள் சட்டியிலிருந்து அடுப்பை நோக்கி’, ‘மக்களின் சிக்கல்களுக்கு அடக்குமுறையால் தீர்வு தேடுவதைக் கண்டிகின்றோம்’ உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.