கனடாவிலிருந்து வந்து காணாமல் போனவர், சடலமாக கிடைத்தார்

கடந்த 17ம் திகதி திடீரென காணாமல் போன முதியவரது சடலம் , வல்லையில் இருந்து இன்று நண்பகல் மீட்கப்பட்டுள்ளது.

மூன்று நாள்களாக காணாமற்போன முதியவரின் சடலம் என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

தொண்டைமானாறு வல்லை வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் குருமூர்த்தி (வயது-75) கடந்த 17 ஆம் திகதி புதன்கிழமை காணாமல் போயிருந்தார். அவர் நினைவு மறதி கொண்டவர் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.