பொதுமன்னிப்பு ஆவணத்தில் கையொப்பம்! – விடுதலையாகவுள்ளார் ரஞ்சன்.

சிறைத் தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான ஆவணத்தில் கையொப்பம் இடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனுமதியுடன் குறித்த ஆவணத்தில் தான் கையெழுத்திட்டார் என்று ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி ரஞ்ஜன் ராமநாயக்க பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தான் தெரிவித்த கருத்துக்கு அவர் மன்னிப்புக் கோரி நீதிமன்றத்திடம் சத்தியக் கடதாசி கையளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.