அரசியலில் ஈடுபட ரஞ்சனுக்கு முழுச் சுதந்திரம் வேண்டும்! – ஜனாதிபதியிடம் சஜித் கோரிக்கை.

“ரஞ்சன் ராமநாயக்கவுக்கு முழுமையான விடுதலை கிடைக்கவில்லை. எனவே, அவர் சுதந்திரமாக அரசியலில் ஈடுபடுவதற்கு முழுமையாகச் சுதந்திரம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ரஞ்சன் ராமநாயக்கவுடன் இன்று மாலை இணைந்து நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

“ரஞ்சன் ராமநாயக்கவைத் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார். கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே ரஞ்சனுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும்” – என்றும் சஜித் மேலும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.