அரசுக்கு எதிராக சஜித் அணி போராட்டம்!

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

மின் கட்டண அதிகரிப்பை உடன் மீளப்பெறுமாறு இதன்போது அவர்கள் வலியுறுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.