நாளை யாழில் செவிப்புல வலுவிழந்த சாரதிகளுக்கு இலட்சணை வழங்கும் நிகழ்வு

யாழ். மாவட்ட போக்குவரத்து பொலீஸ் அதிகாரிகளினால் , செவிப்புல வலுவிழந்த (காது கேளாதோர்) சாரதிகள் தொடர்பிலான விழிப்புணர்வு ,நாளை (02) காலை 9.00 மணிக்கு , யாழ் மாவட்ட செயலகத்தில் இடம் பெற இருப்பதோடு , செவிப்புல வலுவிழந்தோர் (காது கேளாதோர்) பாவிக்கும் வாகனங்களிற்கு இலட்சணை வழங்கலும் இடம் பெற உள்ளது.

இடம்: யாழ் மாவட்ட செயலகம்
காலம்: 02:08:2022
நேரம் : காலை 09:00 மணி

 

மாவட்ட செயலரின் எண்ணகருவிற்கமைய, இலங்கையில் முதல் முறையாக செவிப்புல வலுவிழந்தவர் நலன் கருதி, விது நம்பிக்கை நிதியத்தினரின் வழிகாட்டல் மற்றும் அனுசரனையுடன், யாழ் அரச அதிபரின் தலைமையில், வடமாகாண போக்குவரத்து ஆணையாளர் உட்பட அதிகாரிகள் பங்குபெறும் நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பயணடையுமாறு விது நம்பிக்கை நிதியத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.