கனியாமூர் பள்ளியை சீரமைப்பதற்கு அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் பள்ளியை சீரமைப்பதற்கு அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்த மாணவி உயிரிழந்தது தொடர்பாக, கடந்த ஜூலை 17 ஆம் தேதி கலவரம் மூண்டது. பள்ளிக்குள் நுழைந்த போராட்டகாரர்கள் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களுக்கு தீவைத்ததோடு, பள்ளி அறைகளையும் சேதப்படுத்தினர்.

இந்த நிலையில் பள்ளியை சீரமைக்க அனுமதிக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்ற நீதிமன்றம் 10 நாட்களில் மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்ய உத்தரவிட்டது. இந்த நிலையில், பள்ளியை சீரமைப்பதற்கு பள்ளி நிர்வாகத்திற்கு அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்படும் அலுவலர் மற்றும் காவல்துறையின் கண்காணிப்பில் 45 நாட்களுக்கு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.