சிறுமிகளை வன்புணரும் கூடாரமாக யாழ். கோட்டை மாவட்ட செயலகக் கூட்டத்தில் சுட்டிக்காட்டு.

யாழ்ப்பாணம் நகரிலிருந்து தீவுப்பகுதிக்குச் செல்லும் பிரதான மார்க்கமான பண்ணைப் பாலத்தின் கீழ்ப் பகுதி மற்றும் கோட்டைக்கு வெளியேயுள்ள பகுதி என்பனவற்றில் தொடர்ச்சியாக பல சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்று யாழ். மாவட்ட செயலகக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முனியப்பர் ஆலயத்துக்கு பின்பாகவும், கோட்டைக்கு வெளியேயும் உள்ள பகுதியிலேயே பாடசாலைச் சிறுமிகள் பலர் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

காதலர்கள் என்ற போர்வையில் அங்கு அழைத்துவரப்படும் சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகின்றனர்.

கடந்த சில மாதங்களாக இந்தச் சம்பவங்கள் அங்கு அதிகரித்துள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று பண்ணைப் பாலத்தின் கீழ்ப் பகுதியிலும் இதேபோன்று சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் தமது பிள்ளைகளின் செயற்பாடுகள் தொடர்பில் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும், பொலிஸார் இந்தப் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் யாழ். மாவட்ட செயலகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.