உயர் பாதுகாப்பு வலய அறிவித்தலை வாபஸ் பெறுங்கள்! – மனித உரிமை ஆணையம்

உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்துவதற்கு அரச இரகசிய சட்டத்தை பயன்படுத்த முடியாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

அரச இரகசியச் சட்டத்தைப் பயன்படுத்தி அதியுயர் பாதுகாப்பு வலயத்தை பிரகடனப்படுத்தும் அரசாங்கத்தின் அணுகுமுறை இலங்கை மக்களின் அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயலாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவியான ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எனவே 2298/53 வர்த்தமானியை மீளப்பெறுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.