வவுனியா விபத்தில் வயோதிபர் மரணம்!

வவுனியா – தாலிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக மரணமடைந்தார்.

இன்று பிற்பகல் மன்னார் வீதியூடாகச் வந்து கொண்டிருந்த வயோதிபரை அதே திசையில் பின்னால் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் நோயாளர் காவு வண்டியின் மூலம் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.

தாலிக்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் (வயது 68) என்ற வயோதிபரே மரணமடைந்தார்.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திய மற்றைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாகப் பூவரசங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.