போதைப்பொருள் விற்பனை வலையமைப்பை ஒழியுங்கள் – யாழ். போதனா வைத்தியசாலை தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் பேரணி (photos)

போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

யாழ். போதனா வைத்தியசாலை முன்றலில் இன்று நண்பகல் 12 மணியளவில் இந்தப் பேரணி ஆரம்பித்து மணிக்கூட்டு கோபுர வீதியூடாக, யாழ். பொலிஸ் நிலையத்தை அடைந்து அங்கிருந்து பிரதான வீதியூடாக சுண்டுக்குளிச் சந்தியை அடைந்து பழைய பூங்கா வீதியூடாக யாழ். மாவட்ட செயலகத்தை அடைந்தது.

இதன்போது யாழ். மாவட்ட செயலர் க.மகேசனுக்கு யாழ். போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினரால் மகஜரும் கையளிக்கப்பட்டது.

இந்தப் பேரணியின் போது யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், மருத்துவ மாணவர்கள் என அனைவரும் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.