எந்தப் பிரச்சினைகளுக்கும் அரசால் தீர்வு காண முடியாது! தேர்தல்தான் தீர்வு : கம்மன்பில வ

“இந்த அரசின் போக்குச் சரியில்லை. அது வீழ்ச்சிப் பாதையில் செல்கின்றது. நாட்டில் அரசியல், பொருளாதாரம் என எந்தப் பிரச்சினைகளுக்கும் இந்த அரசால் தீர்வு காண முடியாது.”

இவ்வாறு புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இது நிலையான அரசு இல்லை. அதுதான் அதிலிருந்து நாம் வெளியேறி சுயாதீனமாகச் செயற்படுகின்றோம்.

நாடு மீண்டெழ வேண்டுமெனில் நிலையான அரசு ஆட்சியில் இருக்க வேண்டும்.

எனவே, அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முதலில் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும்.

அப்போதுதான் மக்களின் தற்போதைய மனநிலையை அறிந்துகொள்ள முடியும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.