வீடியோ உரையாடல்: மாணவியை மிரட்டிப் பாலியல் துஷ்பிரயோகம்! – யாழில் இரு இளைஞர்கள் கைது.

யாழ். வலிகாமம் வலயத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 மாணவியின் வீடியோ உரையாடலைப் பதிவு செய்து, அதை வைத்து மிரட்டி, அவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஏழாலையைச் சேர்ந்த 20 மற்றும் 25 வயது இளைஞர்கள் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவியுடன் இளைஞர் ஒருவர் வீடியோவில் உரையாடலை சில மாதங்களுக்கு முன்னர் மேற்கொண்டுள்ளார். இதன்போது அந்த உரையாடலைப் பதிவு செய்துள்ளார்.

மாணவி துவாயுடன் இருக்கும் அந்த உரையாடல் பதிவை தனது உறவினரான இன்னொரு இளைஞருக்கும் குறித்த இளைஞர் அனுப்பியுள்ளார்.

அவ்வாறு தனது நண்பனின் மூலம் கிடைத்த அந்த வீடியோ பதிவை ஏனையோருக்கும் அனுப்ப உள்ளதாக மிரட்டி மாணவியை அந்த இளைஞர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். அதேவேளை, இந்த வீடியோ பதிவு பல இடங்களிலும் பகிரப்பட்டுள்ளது.

மாணவி கல்வி கற்கும் பாடசாலைச் சமூகத்துக்கு இந்த விடயம் தெரியவந்ததைத் தொடர்ந்து ஆசிரியர்களால் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் ஊடாக பொலிஸ் நிலையத்துக்கு இது குறித்து தகவல் வழங்கப்பட்டது.

இதையடுத்து வீடியோ பதிவு செய்த இளைஞரும், அதனைப் பயன்படுத்தி மாணவியைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இளைஞரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.