ஏரோ இந்தியா’ சர்வதேச விமான கண்காட்சி

ஏரோ இந்தியா’ சர்வதேச விமான கண்காட்சி வரும் 2021 பிப்., மாதம் நடத்த பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: ஆசியாவிலேயே மிகப்பெரிய விமான கண்காட்சியாக கருத்தப்படும் ‘ஏரோ இந்தியா’ சர்வதேச விமான கண்காட்சியை பெங்களூருவில் நடந்த முடிவு செய்யபப்பட்டுள்ளது. பிப்.,3 முதல் 5ம் தேதி வரை கண்காட்சியின் முக்கிய நிகழ்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிப்.,6 மற்றும் 7ம் தேதி, கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர்.

பாதுகாப்பு உற்பத்தி துறை முதலீட்டுக்கு, இந்தியா சிறந்த இடம் என்பதை சர்வதேச முதலீட்டாளர்களுக்கு வெளிப்படுத்த இந்த கண்காட்சி உதவும். மேலும், உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவிக்கவும் உதவும். விமான கண்காட்சியை நடத்த, பெங்களூரு எலஹங்கா விமானப்படை தளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.