நேற்று கைது செய்யப்பட்ட 16 வயது பாடசாலை மாணவர் விடுதலை – நான்கு பேர் இன்று நீதிமன்றத்திற்கு!

அரகலய போராட்ட மாவீரர்களை நினைவு கூருதல் உள்ளிட்ட பல விடயங்களை முன்னிறுத்தி நேற்று (09) காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 16 வயதுடைய பாடசாலை மாணவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட ஏனைய நான்கு பேரும் இன்று (10) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

போராட்டக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கொண்டாட்டம் ஆரம்பம் முதலே பாதுகாப்பு படையினரால் தடைப்பட்டது.

எவ்வாறாயினும், போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நினைவு கூர்ந்ததையடுத்து, பொலிஸார் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவித்திருந்தனர்.

பின்னர் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டு பலரை போலீசார் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.