குழந்தைகள் தினத்தில் நடனமாடிய ஆசிரியை மீதான விசாரணை நிறுத்தி வைப்பு (நடன வீடியோ இணைப்பு)

உலக குழந்தைகள் தினத்தில் நடனமாடிய ஆசிரியை தொடர்பான விசாரணை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு – கதிரான கனிஷ்ட கல்லூரியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்கள் ஊடாக சர்ச்சைகள் எழுந்தன.

இது தொடர்பில் மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ் அவர்களின் கையொப்பத்துடன் கூடிய விசேட அறிவிப்பு ஒன்றை மேல்மாகாண கல்வி திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் நீர்கொழும்பு பிராந்திய கல்விப் பணிப்பாளரிடம் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டதாகவும், சிறுவர் தினத்திற்காக பாடசாலையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்குபற்றிய கூட்டு நடவடிக்கையாகவே இச்சம்பவம் பாடசாலை வளவுக்குள் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை என மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.