யாழில் காணி ஒன்றுக்குள் 111 கைக்குண்டுகள் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் இன்று 111 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடி படையினரால் இந்தக் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவாலி, அட்டகிரி பகுதியில் காணி ஒன்றை அதன் உரிமையாளர் கடந்த 11ஆம் திகதி உழவுக்குட்படுத்திய நிலையில் சந்தேகத்துக்கிடமான பொருளை அவதானித்துள்ளார்.

இதையடுத்து இது குறித்து மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த மானிப்பாய் பொலிஸார் கைக்குண்டுகளை அடையாளம் கண்டனர்.

இந்தநிலையில், நீதிமன்ற அனுமதி பெற்று இன்று காலை 6 மணி முதல் யாழ். மாவட்ட பொலிஸ் விசேட அதிரடிப் படையினால் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் போது 111 கைக்குண்டுகள் மீட்கப்பட்டன.

இந்தக் கைக்குண்டுகளைச் செயலிழக்கச் செய்வதற்காகப் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் எடுத்துச் சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.