6 மாலுமிகளுடன் ஶ்ரீலங்கா கடற்படையினரது சோதனை படகு மாயம்!

சந்தேகத்திற்கிடமான கப்பல்களை சோதனையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆறு மாலுமிகளைக் கொண்ட படகு ஒன்று கடந்த 20 நாட்களுக்கும் மேலாக காணாமல் போயுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

ஆறு பேரைக் கொண்ட இந்தக் கடற்படைக் குழுவினர் கடந்த செப்.16ஆம் திகதி தென் கடற்பரப்புக்குச் சென்றிருந்த நிலையில், 17ஆம் திகதி முதல் தொடர்பாடல் துண்டிக்கப்பட்டமையினால் இதுவரை அவர்களுக்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை.

காணாமல் போன மாலுமிகள் தெற்கு கடற்படை கட்டளையில் இணைக்கப்பட்டிருந்தோர் என கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடற்படையினர் இதுவரை கடற்பகுதியில் தேடுதல் நடத்திய போதிலும், கடற்படையினர் குழுவையோ அல்லது படகையோ இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

Leave A Reply

Your email address will not be published.