ஞாயிறன்று நாவலப்பிட்டியில் களமிறங்குகின்றார் மஹிந்த!

நாவலப்பிட்டியில் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவினால் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே 9ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து வெளியேறிய பின்னர் மஹிந்த ராஜபக்ச கலந்துகொள்ளும் இரண்டாவது மக்கள் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.