இனிமேல் இன, மத வன்முறைக்கு இடமில்லை; சகல பிரச்சினைகளுக்கு தீர்வு! – திருமலையில் ரணில்.

“இந்த நாட்டில் இனிமேல் இன, மத வன்முறைக்கு இடமில்லை. அனைவரும் சுதந்திரமாக நடமாடும் நிலைமை தொடர்ந்து நீடிக்கும்.”

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அனைத்துத் தரப்பினரும் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திருகோணமலைக்கு இன்று திடீர் விஜயம் மேற்கொண்டார். இதன்போது திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் எடுத்துரைக்கப்பட்டது.

ஊடகவியலாளர்கள் காணி மற்றும் வீட்டு வசதிகள் அற்று வாழ்கின்றனர் என்றும் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

ஊடகவியலாளர்களின் சகல விடயங்களையும் கேட்டறிந்த ஜனாதிபதி, இவ்விடயம் தொடர்பாகக் குழுவொன்றை நியமித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக வாக்குறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து திருகோணமலை கடற்கரையையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.