யாழ். கொடிகாமத்தில் ரயில் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட தபால் ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து கொடிகாமத்தில் நேற்றிரவு இடம்பெற்றது.

விபத்தில் அதேயிடத்தைச் சேர்ந்த கந்தக்குட்டி சுந்தரம் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.

அருகிலுள்ள குறித்த நபர் தனது வீட்டுக்குப் பாதுகாப்பற்ற கடவையூடாகச் செல்ல முயன்றபோதே விபத்துக்குள்ளாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.