கொழும்பில் இரத்தக் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு!

கொழும்பில் இரத்தக் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி, சி அவென்யு பகுதியிலிருந்து இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்குக் கிடைத்த தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சடலம் சுமார் 40 முதல் 50 வயது மதிக்கத்தக்க ஆண் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.