யாழில் ஹெரோய்னுக்கு அடிமையான இளைஞர் திருட்டுக் குற்றச்சாட்டில் கைது!

யாழ்ப்பாணத்தில் வீடுடைத்து பத்து இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் அலைபேசி என்பனவற்றைத் திருடிய குற்றச்சாட்டில் 29 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சித்தன்கேணிப் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர், உயிர்கொல்லி ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையானவர் என்று பொலிஸார் தெரிவித்தனர் .

சங்கானை மேற்கு பகுதியில் பொறியியலாளரின் வீட்டில் திருட்டு இடம்பெற்றது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவுடைத்து உள்நுழைந்து 10 இலட்சத்து 43 ஆயிரம் ரூபா பெறுமதியான நகை மற்றும் பெறுமதியான அலைபேசி என்பன திருடப்பட்டிருந்தன. இது தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் காங்கேசன்துறை குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் சங்கானையைச் சேர்ந்த 29 வயது இளைஞரை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.

அவரிடமிருந்து திருடப்பட்ட அலைபேசி மீட்கப்பட்டது என்று பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

நகைகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபர் தேடப்பட்டு வருகின்றார் என்றும் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.