இங்கிலாந்தின் அதிர்ச்சி தோல்வியால் உலகக் கோப்பை புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றங்கள்.

டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அயர்லாந்து அணி ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுத்துள்ளது. குரூப் ஏ பிரிவில் இரு அணிகளும் மோதிய இந்த போட்டி மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.

இதை தொடர்ந்து சூப்பர்12 சுற்றில் இன்று நடைபெற இருந்த 2-வது போட்டியில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோத இருந்தன. மெல்போர்னில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அயர்லாந்து அணியின் ஆச்சரிய வெற்றி, மற்றும் நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் போட்டி ரத்து போன்றவற்றால் உலகக் கோப்பை புள்ளிபட்டியலில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதன்படி குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து அணி 1 வெற்றி மற்றும் 1 முடிவு இல்லாத போட்டியின் காரணத்தால் 3 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

ஒரு வெற்றி ஒரு தோல்வி என இந்த பட்டியலில் இலங்கை அணி 2-வது இடத்திலும், இங்கிலாந்து அணி 3-வது இடத்திலும் அயர்லாந்து அணி 4-வது இடத்திலும், ஆஸ்திரேலியா அணி 5-வது இடத்திலும் உள்ளது. 1 புள்ளியுடன் இந்த குரூப் 1 புள்ளி பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது.

குரூப் பி பிரிவில் வங்காளதேச அணி ரன்ரேட் அடிப்படையில் 2 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்திய அணி அதே 2 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 1 புள்ளியுடன் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணி அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஒரு புள்ளியை கூட பெறாத பாகிஸ்தான் அணி 5-வது இடத்திலும், நெதர்லாந்து அணி கடைசி இடத்திலும் உள்ளது.

இரண்டு குரூப்களிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து அணி தற்போது முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஏற்கனவே ஒரு தோல்வியை சந்தித்து விட்டன.

இதனால் நாளை நடைபெற இருக்கும் இங்கிலாந்து- மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த போட்டியில் ஒருவேளை இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தால் அதன்பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி இங்கிலாந்து அணிக்கு வாழ்வா? சாவா ஆட்டமாக மாறலாம்.

Leave A Reply

Your email address will not be published.