மண்டைதீவுக் கடலில் 8 பேர் கைது!

யாழ்., மண்டைதீவுக் கடற்பரப்பில் கடலட்டை பிடித்த ஏழு பேரையும், தங்கூசி வலையைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட ஒருவரையும் நாளை திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்த கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடற்படையினரும் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களமும் இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையில் கடலட்டை பிடித்து வந்த ஏழு பேர் கடலட்டையுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, தங்கூசி வலையைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டு அவரது படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.