வவுனியாவில் நீதி வேண்டி உறவுகள் இன்று போராட்டம்.

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தால் நீதி கோரியும் அரசுக்கு எதிராகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டம் வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்றது.

“கொலையாளி ஜனாதிபதியாக உள்ள நாட்டில் எமக்கு எப்படி நீதி கிடைக்கும்?”, “குடும்பங்களாகச் சரணடையும் போது அவர்களுடன் சேர்ந்து சரணடைந்த 29 க்கும் மேற்பட்ட குழந்தைகள் எங்கே?”, “போர்க்காலத்தில் மரணித்த இராணுவ உடல்களைப் பொறுப்பெடுக்க மறுத்த சிங்கள அரசு அவர்களைக் காணாமல் ஆக்கப்பட்டோர் என அவர்களின் குடும்பத்தையும் ஏமாற்றுகின்றது” போன்ற பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளைக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.