கொழும்பு தாய்லாந்து தூதுவரின் இல்லத்திலிருந்து பல கோடி கொள்ளை!

கொழும்பு 7, மால் வீதியில் உள்ள தாய்லாந்து தூதுவர் போஜ் ஹன்போலின் உத்தியோகபூர்வ இல்லத்தில் திருடன் ஒருவர் அத்துமீறி நுழைந்து திருடியுள்ளதை அடுத்து கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 100 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் பணத்தை திருடன் திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கும் 7.00 மணிக்கும் இடையில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும் முறைப்பாடு கிடைத்துள்ளது.

திருடப்பட்ட பொருட்கள் மற்றும் பணத்தில் கையடக்கத் தொலைபேசி, நினைவுப் பரிசுகள், தாய்லாந்து பணம் மற்றும் இலங்கை ரூபா என்பன உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வீட்டிற்கு வெளியிலும், மற்றுமொரு தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் வீட்டிற்கு உள்ளேயும் இருந்த போதும் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் சந்தேகத்திற்கு இடமான எவரையும் போலீசார் இதுவரை கைது செய்யவில்லை.

Leave A Reply

Your email address will not be published.