கிளிநொச்சியில் ஐஸ், ஹெரோயினுடன் ஒருவர் சிக்கினார்!

கிளிநொச்சி, பாரதிபுரத்தில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 5 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளும், 49 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

இரகசியத் தகவலுக்கு அமைய நேற்று இவை கைப்பற்றப்பட்டன என்றும், இந்தச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த பொலிஸார், விசாரணைகளின் பின்னர் அவர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்றும் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.