பேருவளைக் கடலில் வீழ்ந்து மீனவர் மாயம்.

பேருவளை – மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் கடலில் விழுந்து காணாமல்போயுள்ளார்.

தலாவிட, எப்பாவல பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய நபரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

குறித்த மீனவர் கடந்த செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி ‘ஹிருன் சோன் 2’ என்ற கப்பலில் ஐந்து மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.

அவர் நேற்றிரவு மீன்பிடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது கடலில் விழுந்தார் என்று படகின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.