இரு இளைஞர்கள் சுட்டுப் படுகொலை.
மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொரகொலயா பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இறந்த இருவரும் 30 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
