மோட்டார் சைக்கிள் பாலத்துடன் மோதி ஒருவர் பரிதாப உயிரிழப்பு! – ஹொரணையில் சோகம்.

கொழும்பு – ஹொரண வீதியின் பொகுணுவிட்ட சந்திக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி 45 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று ஹொரண நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த பாலத்துடன் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவரும், அதன் பின்னால் அமர்ந்து பயணித்தவரும் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், பின்னால் அமர்ந்து பயணித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

உயிரிழந்தவர் கிரிஎல்ல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.