நீட் வினாத்தாள் கசிவு: நாடு முழுவதும் வெடித்தது மாணவர்கள் போராட்டம் – நள்ளிரவில் பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா தளக் கட்சியினர் கடந்த சில நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அதன்பின் அவர்களோடு பல மாணவர் இயக்கங்களும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். டெல்லியில் மட்டுமில்லாமல் தமிழகத்திலும் பல இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

போராட்டங்களை கலைக்க போலீசார் தடியடி
மாணவர்களின் போராட்டங்களை கலைக்க போலீசார் தடியடி நடத்துவது, கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது என தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.. போலீசார் கடுமையாக தாக்கியதில் பல மாணவர்கள் காயம் அடைந்திருக்கிறார்கள். ஒரு வாலிபர் கண் பார்வையை இழந்துள்ளார்.

ஒருபக்கம் பல சினிமா பிரபலங்களும் மாணவர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று நள்ளிரவில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில்,

‘இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வினாத்தாள் கசிவு பற்றி ஆலோசித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்படும்.

தேர்வு வினாத்தாள் கசிவை தடுப்பதற்கான மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மசோதாவை விரைந்து நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும். வினாத்தாள் கசிவு தொடர்பகா விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி காணொளியில் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.