சி.ஐ.டியின் புதிய பணிப்பாளராக ரொஷான் அமரசிங்க நியமனம்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சேவைத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றிய ஷானி அபேசேகர, பிரதிப் பொலிஸ்மா அதிபராகத் தரமுயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பணிப்பாளர் பதவி வெற்றிடமாகியிருந்தது.

இருப்பினும், ஷானி அபேசேகர தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றுவார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.