யாழ்ப்பாண மாவட்டத்தில் 459 குடும்பங்களை சேர்ந்த 1589 நபர்கள் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் நள்ளிரவு வரை 459 குடும்பங்களை சேர்ந்த 1589 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு வேலணை பகுதியை சேர்ந்த 2 பேர் மற்றும் சங்கானை பகுதியை சேர்ந்த ஒருவர் என மொத்தமாக 3 பேர் காணாமல் போயுள்ள அதேவேளை 3 நபர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் 15 வீடுகள் முழு அளவிலும், 141 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ள அதேவேளை இதுவரை 4 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.