இலங்கையில் இன்றும் 1,895 பேருக்குக் கொரோனாத் தொற்று!

இலங்கையில் இன்றும் 1,895 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 424 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா நோயாளர்களில் ஒரு இலட்சத்து 885 பேர் குணமடைந்துள்ளனர் என்றும், 17 ஆயிரத்து 805 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொரோனாத் தொற்றால் இதுவரை 734 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.