வாகனங்களுக்கு மாத்திரமே பெற்றோல் வழங்கப்படும் – லங்கா ஐஓசி.

வாகனங்களின் எரிபொருள் தாங்கிகளுக்கு மாத்திரமே நேரடியாக பெற்றோல் விநியோகிக்கப்படும் என லங்கா ஐஓசி இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் அவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

லங்கா ஐஓசி நிரப்பு நிலையங்களில் இருந்து கேன்கள், கொள்கலன்கள் அல்லது போத்தல் களில் பெற்றோல் வழங்கப்படாது என லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐஓசி மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.