பருத்தித்துறையில் மாவீரர் வார அஞ்சலி நிகழ்வு!

மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், பருத்தித்துறை நீதிமன்ற வீதியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பொது ஈகைச்சுடரை இரண்டு மாவீரர்களின் பெற்றோர் ஏற்றிவைத்ததை அடுத்து, மாவீர்களுக்கு அக வணக்கம் செலுத்தி, தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாள் வரையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.