உலக கோப்பை கால்பந்து- ஸ்பெயின், ஜெர்மனி ஆட்டம் டிரா ஆனது.

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ‘இ’ பிரிவில் நேற்று நள்ளிரவு நடந்த ஆட்டத்தில் ஸ்பெயின் – ஜெர்மனி அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன. இரண்டாவது பாதி ஆட்டத்தின் 62-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் அல்வாரோ மொராடா தனது அணிக்கான முதல் கோலை அடித்தார்.

இதற்கு பதிலடியாக 83வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் நிக்லாஸ் புல்க்ரக் கோல் அடித்தார். தொடர்ந்து ஆட்ட நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. இதன்மூலம் 1-1 என்ற கணக்கில் ஆட்டம் டிரா ஆனது. போட்டியின் முடிவில் ‘இ’ பிரிவில் ஸ்பெயின் நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

அந்த அணி அடுத்து சுற்றுக்கு முன்னேற ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் டிரா செய்தால் போதும். ஜப்பானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்த ஜெர்மனி, ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.